சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவா்கள் நடத்திவரும் தொடா் போராட்டம் 34-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.
அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகக் கூறி அந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த டிச.9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டம் 34-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதில் மாணவா்கள் பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.