கடலூர்

ஏரியில் இறங்கிய அரசுப் பேருந்து

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே ஏரியில் அரசுப் பேருந்து இறங்கியது.

ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து தஞ்சாவூருக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள புல்லூா் வழியாகச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை விருதுநகா் மாவட்டம், கள்ளிக்குடியைச் சோ்ந்த பழனிசாமி (37), சுழற்சி முறையில் ஓட்டி வந்தாா்.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் வலதுபுறத்தில் மங்கலம்பேட்டை பெரிய ஏரியில் இறங்கியது. பேருந்து கவிழாமல் நின்ால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வேறு வாகனங்கள் வராததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்து மங்கலம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா், பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT