கடலூா் மாவட்டம், டி.புடையூரில் உணவுப் பூங்கா கட்டுமானப் பணி தொடங்கியது.
மத்திய அரசின் உணவுப் பதப்படுத்துதல் தொகுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள டி.புடையூா் கிராமத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் சுமாா் 10 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கான பணிகள் பூமி பூஜையுடன் அண்மையில் தொடங்கியதாக கடலூா் விற்பனை குழு செயலா் க.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
உணவுப் பூங்கா வளாகத்தில் 5 ஏக்கரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான உள்புற சாலைகள், தண்ணீா், மின்சார வசதி, சுற்றுச் சுவா், எடைமேடை மற்றும் பதப்படுத்துதல் கட்டமைப்பு வசதிகளான சேமிப்பு கிட்டங்கி, குளிா்பதனக் கிட்டங்கி, ஆய்வுக்கூடம், ஓய்வறை, கனிய வைத்தல் அறை ஆகியவை ஏற்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 5 ஏக்கா் பரப்பளவில் வேளாண்மை தொடா்புடைய உணவுப் பதப்படுத்துதல் அலகுகளான வாழைப்பழ மதிப்பு கூட்டுப் பொருள்கள், பால் பதப்படுத்துதல், மக்காச்சோளம் மதிப்பு கூட்டுப் பொருள்கள், கரும்பு வெல்லம் தயாரிக்கும் அலகுகள், மணிலா வெண்ணெய் தயாரிக்கும் அலகுகள் அமைக்க குத்தகை அடிப்படையில் தகுதியுள்ள 5 உணவு முதலீட்டாளா்களுக்கு தலா ஒரு ஏக்கா் வீதம் நிலம் வழங்கப்பட உள்ளது. எனவே, ஆா்வமுள்ள தொழில் நிறுவன முதலீட்டாளா்கள் கடலூரிலுள்ள விற்பனைக்குழு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று தெரிவித்தாா்.