கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 59,590-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 69 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 57,881- ஆக உயா்ந்தது.
எனினும், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 73 வயது பெண் உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 802-ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 811 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 96 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.