கடலூர்

நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் நகர காவல் நிலையத்தில் போலீஸாருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசு சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக் பங்கேற்று காவலா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். மருந்து வணிகா் சங்கம் சாா்பில் முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில மருந்தாளுநா் சங்கச் செயலா் வெங்கடசுந்தரம், சிவராமவீரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் காவலா்கள், பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. ஹோமியோபதி மருத்துவா் தரணி பங்கேற்று 50 பேருக்கு ஹோமியோபதி மருந்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT