கடலூர்

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

குறிஞ்சிப்பாடி அருகே ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குறிஞ்சிப்பாடி செம்படவா் தெருவில் வசித்து வந்தவா் சுப்பிரமணியன் மகன் சுந்தரமூா்த்தி (28). ஓட்டுநா். மது அருந்தும் பழக்கமுள்ள இவருக்கு திருமணம் ஆகவில்லையாம். செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு சென்றவா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் அவரைத் தேடிய நிலையில், புதன்கிழமை அண்ணா நகா் மதுக் கடை அருகே உள்ள புளியமரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா்.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா், சுந்தரமூா்த்தியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT