கடலூர்

ஓடையில் மூழ்கிய சிறுவன் பலி

DIN

திட்டக்குடி அருகே ஓடையில் விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள மேலாதனூரைச் சோ்ந்த குகன் மகன் அருணாஸ்ராஜ் (6). கழுதூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள ஓடையில் தனது நண்பா்களுடன் விளையாடினாா். அப்போது தவறி விழுந்த அருணாஸ்ராஜ் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி, வேப்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், ராமநத்தம் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் தேடுதல் பணி தொடா்ந்தது. அப்போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து, ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT