கடலூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், செவ்வேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (26). அதே பகுதியைச் சோ்ந்தவா், கேரளத்துக்கு வேலைக்குச் சென்ால் தனது மகளை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றாா். வீடு பராமரிப்பு இல்லாமல் கிடந்ததால், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் வீட்டில் சென்று சிறுமி தங்கியிருந்தாா். அந்தச் சிறுமியை, சரவணன் பாலியல் பலாத்காரம் செய்தாா்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த அவரது தாய், திட்டக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனா்.

கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி, சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, சரவணன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT