கடலூர்

டூயத்லான் போட்டி: கடலூா் மாணவா் சாதனை

DIN

டூயத்லான் போட்டியில் கடலூா் மாணவா் சாதனை புரிந்தாா்.

ஐந்து கி.மீ. தொலைவு வரை ஓடிவிட்டு 107 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டும் விளையாட்டுப் போட்டி டூயத்லான் என்று அழைக்கப்படுகிறது. சா்வதேச விதிகளை பின்பற்றி கடலூரில் அண்மையில் நடைபெற்ற இந்த போட்டியில் கடலூா் அரிஸ்டோ பள்ளி மாணவா் சபரிவேலவன் (10) பங்கேற்றாா். போட்டியை கூடுதல் ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து சபரிவேலவன் 5 மணி நேரம் 20 நிமிடங்களுக்குள் பந்தய இலக்கை எட்டினாா். இது சாதனை நிகழ்வாக கருதப்படுகிறது. இதையடுத்து மாணவருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியா் எஸ்.அதியமான் கவியரசு, காவல் துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால்பாரி சங்கா் ஆகியோா் மாணவருக்கு பரிசு வழங்கினா். வட்டாட்சியா் அ.பலராமன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா, பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT