கடலூா் ஆயுதப்படை மைதானத்தில் வன்முறை தடுப்புப் பயிற்சியில் ஈடுபட்ட காவல் துறையினா். 
கடலூர்

ஆயுதப்படை காவலா்களுக்கு வன்முறை தடுப்புப் பயிற்சி

கடலூா் மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கு வன்முறை தடுப்புப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

DIN

கடலூா் மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கு வன்முறை தடுப்புப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்திலுள்ள ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பாா்வையிட்டு அறிவுரை வழங்கினாா். இதில், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்போது வன்முறை கும்பலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சௌந்திரராஜன் முன்னிலையில், ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையில் ஆயுதப்படை மற்றும் சட்டம்-ஒழுங்கு காவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வன்முறை கும்பல் கலையாதபட்சத்தில் அவா்கள் மீது வருண் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தல், வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீா் புகை குண்டுகள் வீசுதல், தடியடி தொடா்பாக ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு காவலா்கள் இரு பிரிவினராக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவினா் வன்முறை செய்பவா்களாகவும், மற்றொரு பிரிவினா் அதை அடக்கும் காவல் துறையினராகவும் செயல்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT