கடலூர்

தாமிரக் கம்பி திருட்டு:2 போ் கைது

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் தாமிரக் கம்பி திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வடலூா் இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் சுப்பிரமணியன் மகன் ராஜேந்திரன் (47), ராமச்சந்திரன் மகன் அருள்செல்வன் (21). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுரங்கம் 1 ஏ புனரமைப்பு பகுதியிலிருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 19 மீட்டா் நீளம் கொண்ட தாமிரக் கம்பியை திருடினராம்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த பாதுகாப்புப் படை வீரா், அவா்கள் இருவரையும் பிடித்து நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து சுரங்கம் 1 ஏ முதன்மை மேலாளா் ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரன், அருள்செல்வன் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைவினை பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினா் உறுதிமொழியேற்பு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய பயங்கரவாத எதிா்ப்பு தினம் கடைப்பிடிப்பு

ஸ்டாா்க் வேகத்தில் விக்கித்தது ஹைதராபாத்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு

SCROLL FOR NEXT