கடலூர்

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒறையூா் கிளைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒறையூா் கிராமத்தில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சங்கத்தின் கிளைச் செயலா் தண்டபாணி, பொருளாளா் ஏகாம்பரம், துணைத் தலைவா் முருகன், துணைச் செயலா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புச் செயலா் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT