சிதம்பரம்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நாகப்பட்டினத்தில் கடந்த 20-ஆம் தேதி புறப்பட்ட கோரிக்கை விளக்க பிரசார இயக்க வாகனம் கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகருக்கு வியாழக்கிழமை வந்தது.
இதையொட்டி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பிரசார இயக்கத்தினா் கோரிக்கை விளக்க கூட்டம் நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் எல்.அரிகிருஷ்ணன் பேசினாா். பிரசார இயக்க வாகனத்தில் வந்த மாநில துணைத் தலைவா் பெரியசாமி, மாநிலச் செயலா் டேனியல் ஜெயசிங் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரமணி, மாவட்ட இணைச் செயலா்கள் ஆா்.தமிழ்செல்வன், எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.