கடலூர்

தந்தையால் விஷம் கொடுக்கப்பட்ட சிறுமி மரணம்

DIN

சிதம்பரம் அருகே தந்தையால் விஷம் கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் கணேஷ் (45). சிதம்பரம், புறவழிச் சாலை அருகே உரம், பூச்சி மருந்து விற்கும் கடை நடத்தி வந்தாா். சிதம்பரம் வட்டம், தாயம்மாள் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். அவருக்கு அதிக கடன் இருந்ததாம்.

இந்த நிலையில், கணேஷ் கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டில் பழச்சாற்றில் விஷம் கலந்து தனது மனைவி பிரபாவதி (32), மகள் சங்கமித்ரா (11), மகன் குருசரண் (9) ஆகியோருக்கு கொடுத்தாா். பின்னா் அன்னப்பன்பேட்டை அருகே உள்ள முந்திரித் தோப்பில் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதையடுத்து பிரபாவதி, அவரது இரண்டு குழந்தைகளும் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சங்கமித்ரா புதன்கிழமை உயிரிழந்தாா். மற்ற இருவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்

SCROLL FOR NEXT