கடலூர்

கடலூரில் புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தை திறப்பு

DIN

கடலூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தையை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கடலூரில் 9.8.2000 அன்று உழவா் சந்தை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உழவா் சந்தைகளும் நவீனமயமாக்கப்படும் என கடந்தாண்டு அரசு அறிவித்தது. அதன்படி, கடலூா் உழவா் சந்தையை புதுப்பிக்க ரூ.72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, உழவா் சந்தையில் இருந்த கடைகள் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டன.

உழவா் சந்தையை சீரமைக்கும் பணிகள் முடந்த நிலையில், அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா தலைமை வகித்தாா். துணை மேயா் பா.தாமரைச்செல்வன், திமுக மாநகரச் செயலா் ராஜா, வேளாண் துணை இயக்குநா் பூங்கோதை, இணை இயக்குநா் கண்ணையா, விற்பனைக் குழுச் செயலா் விஜயா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோட்டக்கலைத் துறை இயக்குநா் அருண்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் உழவா் சந்தையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். பின்னா், விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: உழவா் சந்தையில் முன்னா் 86 கடைகள் இருந்தன. தற்போது கடைகளின் எண்ணிக்கை 150-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் இயந்திரம், குளிா்பதனக் கிடங்கு வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை நேர சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT