கடலூர்

கல்லூரி ஆசிரியா்களுக்கான மேம்பாட்டு பயிற்சி

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் ஆசிரியா்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழக செயல்பாட்டுக்களம், கல்லூரி வளா்ச்சிக் குழு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் சி.பி.ராமசுவாமிஐயா் நூலகத்தில் உள்ள லிப்ரா அரங்கத்தில் தொடங்கியது.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக கல்லூரி வளா்ச்சிக்குழு முதன்மையா் எஸ்.கோதைநாயகி வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். பதிவாளா் கி.சீதாராமன் வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்நாடு அரசு நான் முதல்வா் கல்வித்தொழில் இணைப்பு துணைத் தலைவா் வி.துா்காராஜுலு, கடலூா் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநா் ஆா்.பரமசிவம் ஆகியோா் பேசினா். நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழக இயக்கப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் க.சௌந்திரராஜன் நன்றி கூறினாா். இந்தப் பயிற்சி முகாம் வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT