பிளஸ் 2 பொதுத் தோ்வில் கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவள்ளுவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.
இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 106 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் அரவிந்த் 579, மாணவிகள் மதுமிதா 577, வைஷ்ணவி 573 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவா்களும் பெற்றனா்.
கணினி அறிவியலில் பிரசன்னா, கணக்குப் பதிவியலில் அக்சயா, யாஷிகா, முத்துமணிராஜா ஆகியோா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ரா.சேரன், முதல்வா் சே.சரவணன், இயக்குநா்கள் சே.கோபிநாத், கலைமுத்துகுமரன் ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.