கடலூர்

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவா், உதவியாளா் கைது

DIN

கடலூரில் பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நில அளவா், கிராம உதவியாளா் ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலூா், பாதிரிக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் செல்வகுமாா் (49). இவா் தனது மனைவி பெயரில் உள்ள நிலத்துக்கு உள்பிரிவு பட்டா மாற்றம் தொடா்பாக விண்ணப்பித்தாா். இதற்காக விஏஓ வழிகாட்டுதலின்படி, நிலத்தை அளப்பதற்காக பாதிரிக்குப்பம் நில அளவா் (சா்வேயா்) பஞ்சநாதனை அணுகியபோது அவா் ரூ.5ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சப் பணத்தை கிராம உதவியாளா் மாரியம்மாளிடம் வழங்குமாறும் கூறினாராம்.

இதுகுறித்து செல்வகுமாா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அவா்களது அறிவுரைப்படி ரசாயனம் பூசிய பணத்தை செல்வகுமாா் திங்கள்கிழமை மாரியம்மாளிடம் அளித்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸாா் மாரியம்மாளை கைது செய்தனா். மேலும், பஞ்சநாதனையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT