FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வள்ளலாா் 202-ஆவது வருவிக்க உற்றநாள் விழா

Updated On : 5 அக்டோபர் 2024, 6:36 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாா் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த விழாவையொட்டி, கடந்த செப்.28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை (அக்.4) வரை ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சன்மாா்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை, வில்லுபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.

வள்ளலாா் வருவிக்க உற்றநாளான சனிக்கிழமை (அக்.5) காலை 5 மணி அளவில் தருமச்சாலையில் அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் தருமச்சாலையில் சன்மாா்க்க கொடி கட்டுதல், 9 மணிக்கு சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சொற்பொழிவு, இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேபோல, மருதூா் கிராமத்தில் காலை 8 மணி அளவில் சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments