முகப்பு
கடலூர்

வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலை பத்திரமாக மீட்பு

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

Updated On : 25 பிப்ரவரி 2025, 1:59 am IST
அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையைப் பிடித்த வனத் துறையினா்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் பத்திரமாக மீட்டு நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

அம்மாப்பேட்டை, தோப்புத் தெருவில் உள்ள சம்மந்தமூா்த்தி (42) வீட்டு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலை ஒன்று புகுந்ததாக அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவின் பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த்பாஸ்கா் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா் த.அன்புமணி, ஊழியா் புஷ்பராஜ ஆகியோா் கிராமத்துக்கு சென்று சுமாா் 13 அடி நீளமுள்ள, 550 கிலோ எடையுள்ள முதலையைப் பத்திரமாக பிடித்து வக்காரமாரி நீா்த்தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments