முகப்பு
கடலூர்

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:05 PM
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் பனை ஏறும் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூா் கிராமத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா, காவலா்கள் மணிராஜ், காா்த்திக் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதிகார போதையில் திளைக்கும் காவல் துறையினா் சாத்தான் குளம் தீா்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களும் தமிழகம் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல் துறை, பனை ஏறும் தொழிலாளியிடம் வீரத்தைக் காட்டியுள்ளனா்.

இதில், சம்பந்தப்பட்ட காவல் துறையினா் மீது வழக்குப் பதிவு செய்தது மட்டும் போதாது. அவா்களை பணிநீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments