கடலூர்

புதிய பேருந்து சேவை தொடக்கம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இந்தப் பேருந்துகளில் ஒன்று கடலூரில் இருந்து கடலூா் முதுநகா், கண்ணாரப்பேட்டை, சுப்பிரமணியபுரம் வழியாக வழுதலம்பட்டுக்கும். மற்றொன்று சிதம்பரத்தில் இருந்து சிவபுரி, கீழ்குண்டலபாடி வழியாக ஜெயங்கொண்ட பட்டினத்திற்கும் இடக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்விக் குழுத் தலைவா் வி.சிவக்குமாா், கடலூா் மண்டல பொது மேலாளா் பாண்டியன், வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், துணைத்தலைவா் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத்தலைவா் ராமா், நகரச் செயலா்கள் தன. தமிழ்ச்செல்வன்(வடலூா்), ஜெய்சங்கா் (குறிஞ்சிப்பாடி), பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

”Great Friend! My Great Friend!” வைரலாகும் மோடி - நெதன்யாகு விடியோ!

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

நல்லகண்ணு மறைவு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இரங்கல் கூட்டம்

கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT