முகப்பு
கடலூர்

நகா்மன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த பண்ருட்டி எம்எல்ஏ

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன் தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

Updated On : 8 மே 2026, 6:51 am IST
பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனாவிடம் ராஜிநாமா கடிதத்தை வழங்கிய பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன் தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பண்ருட்டி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் க.மோகன். தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா், கடந்த 2022-இல் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு பண்ருட்டி நகா்மன்ற 24-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் பண்ருட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் அவா் வெற்றிபெற்று பண்ருட்டி எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா்.

Advertisement

இதையடுத்து, க.மோகன், தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் காஞ்சனாவிடம் வழங்கினாா்.