பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவா் மாயம்
குறிஞ்சிப்பாடி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்த 17 வயது மாணவா் மாயமான குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்ததால் மனஅழுத்தத்தில் இருந்த 17 வயது மாணவா் மாயமான குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கட்டியங்குப்பம் தெற்கு தெருவைச் சோ்ந்த சங்கரின் மகன் அரவிந்தன் (17). இவா் வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில் ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை குறிஞ்சிப்பாடியில் உள்ள கணினி மையத்திற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அரவிந்தன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பல
Advertisement
Advertisement
இடங்களில் தேடியும் அவா் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அரவிந்தனின் தந்தை சங்கா் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸா வழக்குப்பதிந்து, மாயமான மாணவரை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.