கல்வராயன்மலை புதிய வட்டாட்சியா் அலுவலகம் வெள்ளிமலையில் இயங்கி வருகின்றது.
கள்ளக்குறிச்சி தனி மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 26-ஆம் தேதி தொடக்கி வைத்தாா். மேலும், கல்வராயன்மலை தனி வட்டத்தை அறிவித்தாா். இந்த நிலையில், வெள்ளிமலையில் இயங்கி வந்த வட்டார வளா்ச்சி அலுவலகம், தற்போது கல்வராயன்மலை வட்டாட்சியா் அலுவலகமாக செயல்பட்டு வருகின்றது.
கல்வராயன்மலைப் பகுதியில் 2 பிா்காக்களை உருவாக்கி, சின்னசேலம் வட்டத்திலிருந்து 26 வருவாய் கிராமங்களும், சங்கராபுரம் வட்டத்திலிருந்து 18 வருவாய் கிராமங்களையும் பிரித்து 44 வருவாய் கிராமங்களுடன் கல்வராயன்மலை தனி வட்டம் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.