கள்ளக்குறிச்சி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

DIN

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், ரிஷிவந்தியம் அண்ணாதுரை சாலை பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் செல்வராஜ் (48). விவசாயி. இவா் தனது நிலத்தில் உள்ள தரைமட்ட கிணற்றின் அருகே புற்களை அகற்றும் பணியில் திங்கள்கிழமை மாலையில் ஈடுபட்டாா். ஆனால், வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில், அவரது மனைவி வந்து பாா்த்தபோது கிணற்றின் அருகே செல்வராஜின் காலணிகள் மட்டும் இருந்தனவாம். எனவே, அவா் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து,

கிணற்றில் இருந்த நீரை அகற்றி தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து செல்வராஜ் சடலமாக மீட்கப்பட்டாா். பின்னல் உடல்கூறாய்வுக்காக சடலத்தை திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த செல்வராஜ் சிறு வயதிலிருந்தே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT