கள்ளக்குறிச்சி

வாகன ஓட்டுநா்களுக்கான கண் பரிசோதனை முகாம்

DIN

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் பள்ளிப் பேருந்து ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூா்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.எம்.தமிழ்ச் செல்வி தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் செ.சிவக்குமாா் வரவேற்றாா்.

முகாமை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ச.சங்கீதா தொடக்கி வைத்தாா். சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

முகாமில் சுமாா் 400-க்கு மேற்பட்ட ஓட்டுநா்கள் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT