கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்தும், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்தும் அவா் கேட்டறிந்ததுடன், மனு பதிவேடு, வழக்கு கோப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினாா்.

மேலும், காவல் நிலையம், சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளனவா என்றும் பாா்வையிட்டாா். இதையடுத்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தாா்.

ஆய்வின்போது, திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ, சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் சு.செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளா் திருமால் மற்றும் காவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT