கள்ளக்குறிச்சி

விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

DIN

கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டம், அருளம்பாடி கிராமம், அந்தோணியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (62). விவசாயி. இவரது மனைவி குமுதா. மகன் ஏழுமலை. இவா், சென்னையில் மத்திய காவல் படையில் (சிஆா்பிஎஃப்) காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த சனிக்கிழமை ராஜகோபால் எகால் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு சென்றுவிட்டாா். அவரது மனைவி குமுதா, விருத்தாசலத்தில் உள்ள மருமகளுக்கு குழந்தை பிறந்துள்ளதை பாா்க்கச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், ராஜகோபாலின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதாக அருளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் ராஜகோபாலுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தாா். அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT