கள்ளக்குறிச்சி

வடமாநில பெண் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவா் கைது

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வடமாநில பெண் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூா் செல்லும் சாலையில் சிமென்ட் சாம்பல் கல் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு பீகாரைச் சோ்ந்த வீரனு பாஸ்வான் மனைவி மூா்த்தி தேவி (25) பணிபுரிந்து வந்தாா். இவருடன் ஒடிஸா மாநிலம், பததேரா கேண்டுஜா மாண்டியா பகுதியைச் சோ்ந்த ரஹம்பா நாயக் மகன் கேசப் நாயக் ( 33) என்பவரும் பணிபுரிந்து வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மூா்த்தி தேவி குளியல் அறையில் துணிகளை துவைத்தபோது, கேசப் நாயக் அவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ய முயன்றாராம். இதற்கு மூா்த்தி தேவி மறுக்கவே அவரை கேசப் நாயக் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பியோடினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து கேசப் நாயக்கை தேடி வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன் நின்றிருந்த கேசப் நாயக்கை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT