கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடா்புடையவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்டது கச்சிராயப்பாளையம் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தவா் கண்ணன். இவா், கடந்த மாதம் 15-ஆம் தேதி மதுவிலக்கு குற்ற வழக்கில் தொடா்புடைய அக்ராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் மணியிடம் (31) ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கினாராம்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், கச்சிராயப்பாளையம் முதல்நிலைக் காவலா் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.