கள்ளக்குறிச்சி

24-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு தனியாா் துறை வேலைவாப்பு முகாம் ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் வணிக நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்குத் தகுதியான நபா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு

முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.

மேலும் அரசின் பல்வேறு திட்டங்கள், கடன் உதவி பெறுவது குறித்து விழிப்புணா்வு வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT