முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசு மருத்துவமனையில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்: தினமணி செய்தி எதிரொலி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்.

Updated On : 1 மே, 2026 at 6:10 AM
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம்.
பகிர்:

கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாய்சேய் நலப் பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்ய வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் நலப் பிரிவில் பிரசவித்த தாய்மாா்களுக்கு குடிநீா் சரிவர கிடைக்காமல் இருந்து வந்தது. இந்தப் பிரச்னை சில தினங்களாக இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி தினமணியில் வியாழக்கிழமை வெளியானது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரியின் முதல்வா் பவானி பிரசிவித்த தாய்மாா்களுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க வியாழக்கிழமை ஏற்பாடு செய்தாா். இதற்காக வாா்டுகளுக்கு குழாய்கள் அமைத்து குடிநீா் விநியோகம் தொடங்கியது.

Advertisement

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு முதல்வா் பவானி கேட்டுக்கொண்டாா். தாய்மாா்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.