சுவாமி சின்மயாநந்தரின் நூற்றாண்டு விழாவையொட்டி, புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள சின்மயா சூர்யாவில் சிறப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி நிர்வாகி ஸ்ருதி சைதன்யா மற்றும் ஆச்சாரியா பிரியா அருணாசலம் தலைமையில் நடைபெற்ற முகாமில் சென்னை தாமரைபாக்கம் ஹரிஹர வித்யாலயாவை சேர்ந்த 6, 7-ம் ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் 55-பேர் கலந்து கொண்டனர்.
முகாமில் சனிக்கிழமை நடைபெற்ற ஒவியப் பயிற்சியை ஒவியர்கள் கி.சக்திகுருநாதன், ச.தணிகைவேல் அரசு ஆகியோர் வண்ண ஓவியம், கோட்டோவியம் ஆகியவற்றில் பயிற்சி அளித்தனர். முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கபபட்டன.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமணக்குள விநாயகர்கோயில், ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம், தாவரவியல் பூங்கா, கடற்கரை ஆகிய பகுதிகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.