புதுச்சேரி

24-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

DIN

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. வெற்றி பெறுவோர்களுக்கு புதுச்சேரியில் டிச.4-ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
 புதுவை அரசுத்துறைகள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் 24-ஆம் தேதி காலை 8 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என புதுவை அரசின் சமூகநலத் துறை இயக்குநர் சாரங்கபாணி தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT