புதுச்சேரி

கஞ்சா பயன்படுத்திய 9 பேர் கைது

DIN

திருநள்ளாறில் தங்கும் விடுதியொன்றில் பொறியியல் பட்டதாரியான ஷியாம் சுந்தர் தனது பிறந்த நாளுக்காக நண்பர்களுக்கு வியாழக்கிழமை இரவு விருந்து கொடுத்தாராம். விருந்தில் அவரது நண்பர்கள் விக்ரமன், கிஷோர், குல்முகம்மது, வினோத்ராஜ், வீரமணி, ஸ்ரீபன்ராஜ், விஜய், தினேஷ் ஆகிய 8 பேரும் கலந்துகொண்டனர். இவர்கள், போதைப் பொருளான கஞ்சா வைத்திருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார், சுரேஷ் ஆகியோர் விடுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, மேற்கண்ட 9 பேரும் கஞ்சாவை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT