புதுச்சேரி

காவலர் தேர்வு: வயது வரம்பை தளர்த்தக் கோரி உண்ணாவிரதம்

DIN

காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பைத் தளர்த்தக் கோரி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பினர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுவையில் காவலர் தேர்வில் வயது வரம்பைத் தளர்த்த வலியுறுத்தி, மாணவர் கூட்டமைப்பினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில்,  புதுச்சேரி காந்தி வீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலர்கள் 
முருகன்,  எமிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 காவலர் தேர்வுக்கான வயது வரம்பைத் தளர்த்த வேண்டும்,  அது வரை காவலர் பதவிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் இறுதி நாளை தள்ளிவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசினர்.
உண்ணாவிரதத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் கோ.சுகுமாறன்,  காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT