புதுச்சேரி

காற்று அழுத்தியை பயன்படுத்தியதால் இளைஞரின் வயிறு பாதிப்பு

DIN

காற்று அழுத்தியை (ஏர் கம்ப்ரஸர்) பயன்படுத்தியதால் இளைஞரின் வயிறு பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழில்பேட்டையில் தனியார் அரசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு பிகார்,  ஒடிஸா உள்ளிட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிகாரை சேர்ந்த மிதுபஸ்வான் (32), அவரது உறவினரான ரமயன் பஸ்வான் இருவரும் வியாழக்கிழமை வேலையை முடித்துவிட்டு, காற்று அழுத்தி மூலம் உடலை மாறி மாறி சுத்தம் 
செய்து கொண்டிருந்தனர்.
அப்போது காற்றி அழுத்தியை வைத்து அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது,  எதிர்பாராத விதமாக மிது பஸ்வான் வாய் வழியாக காற்று உள்ளே புகுந்து வயிறு உப்பியதாகக் கூறப்படுகிறது. மயக்கமடைந்த அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT