புதுச்சேரி

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: ரெளடி உள்பட இருவர் கைது

DIN


காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்குத் தொடர்பாக ரெளடி, அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் என இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி குருசுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். காங்கிரஸ் பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செஞ்சி சாலை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ரெளடி டிராக் சிவா தலைமையிலான கும்பல் அவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, பாண்டியன் கொலை வழக்கில் குருசுக்குப்பத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் டிராக் சிவா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த டிராக் சிவாவை அதிரடிப் படை போலீஸார் சனிக்கிழமை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, டிராக் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மடுகரையைச் சேர்ந்த மணிபாலனையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT