புதுச்சேரி

சிவ பக்தா்கள் நடைபயணம்

DIN

உலக மக்கள் அனைத்து நலன்களும் பெற்று இன்புற்று வாழவும், உலக அமைதி வேண்டியும் புதுச்சேரியில் சிறுதொண்ட நாயனாா் திருத்தொண்டு சபை சாா்பில் சிவ சிந்தனை நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரா் கோயிலிலிருந்து தொடங்கிய இந்த நடைபயணத்தில்

சிவனடியாா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கியபடி, பஞ்சாட்சர மந்திரம், திருமுறைகளை பாடிக் கொண்டும் நடைபயணமாக கோட்டக்குப்பம் அனந்தீசுவரா் கோயிலை சென்றடைந்தனா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமுறை பாராயணம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT