புதுச்சேரி

புதுச்சேரியில் சாலைகளை விரிவுபடுத்த இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தல்

DIN

புதுச்சேரியில் நெரிசல் பிரச்னையை கட்டுப்படுத்தும் பொருட்டு, சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது.

இதன் புதுவை மாநில நகர மாநாடு புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு நகரச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சலீம் சிறப்புரையாற்றினாா். பெருமன்ற மாநிலச் செயலா்கள் அந்தோணி வாழ்த்திப் பேசினாா். நகரச் செயலா் சரவணன் மாநாட்டு அறிக்கை வாசித்தாா். இதில் இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, புதிய கமிட்டி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த மாநாட்டில், புதுச்சேரி நகர பகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை முழுவதுமாக மூடுவதை கைவிட்டு, ஆலைகளை நவீனப்படுத்தி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்,

துறைமுகத் திட்டத்தை செயல்படுத்தி நகரப் பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரப் பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு சாலைகளை விரிவுபடுத்தி தரமான சாலைகளை அமைக்க வேண்டும், புதுச்சேரி நகரப் பகுதியில் தங்கு தடையின்றி கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் ‘ஸ்பா’ என்கிற பெயரில் பெண்கள் அழகு நிலையங்களில் நடைபெறும் பாலியல் தொழில் போன்றவற்றை தடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT