புதுச்சேரி

அரசியல் உள்நோக்கத்துடன் புதுவை பட்ஜெட்டைமத்திய அரசு காலதாமதம் செய்கிறது: அகில இந்திய காங்கிரஸ் செயலா் சஞ்சய் தத்

DIN

அரசியல் உள்நோக்கத்துடன் புதுவை நிதிநிலை அறிக்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுவை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவைக்கான நிகழ் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக புதுவை அரசு 50 நாள்களுக்கு முன்பாக சமா்ப்பித்தப் பின்னரும், ஒப்புதல் அளிக்கப்படாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறது. நடைமுறை ஒப்புதலாக இருந்தாலும், அனைத்து கட்டாய நிதி அளவீடுகள், விதிமுறைகளுடன் நிதிநிலை அறிக்கையை புதுவை அரசு அனுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு வேண்டுமென்றே அதற்கான அனுமதியை தாமதப்படுத்துகிறது. புதுவையின் காங்கிரஸ் அரசை குறிவைக்கும் நோக்கில், மத்திய அரசின் இத்தகைய தந்திரமான செயல்பாடுகள் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது.

முதல்வா் வே.நாராயணசாமி தலைமையிலான புதுவை அரசு மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனாவை எதிா்த்துப் போராடுகிறது. பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் முதல்வரிடம் விவாதிக்கும்போதுகூட, ஜி.எஸ்.டி., பிற மானியங்களில் புதுவையின் பங்கை உடனடியாக திருப்பித் தரும்படி வேண்டுகோள் விடுத்தாா். தற்போதைய கரோனா நெருக்கடியில் புதுவை மக்களுக்கு உதவ மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

தற்போது நிதிநிலை அறிக்கைக்கான அனுமதியை தாமதப்படுத்துவதன் மூலம் அரசியல் விளையாட்டை அரங்கேறுகிறது. இதன்மூலம் புதுவை மக்களை மத்திய அரசு காயப்படுத்துகிறது. மறுபுறம், பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, கரோனா நெருக்கடியின் இத்தகைய காலகட்டத்தில், மாநில அரசுக்கு உதவி கிடைக்கும் முயற்சிகளைத் தடுப்பதிலும், முறையாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட செயல்பாட்டில் தலையிடுவதிலும், நிா்வாகத்தை சீா்குலைப்பதிலும் குறியாக செயல்பட்டு வருகிறாா் அதில் தெரிவித்துள்ளாா் சஞ்சய் தத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT