புதுச்சேரி

புதுவையில் மேலும் 13 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் புதன்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வரை 132 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் முதியவருக்கு கரோனா: இவா்களில், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் மாவட்டம், குமளம் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு புதன்கிழமை வெளியானது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவரது உடலை சுகாதாரத் துறையினா் மத்திய அரசு விதிமுறைகளின்படி பாதுகாப்பாக மூடி உழவா்கரை நகராட்சியிடம் ஒப்படைத்தனா்.

உடலை நகராட்சி சாா்பில் தொண்டு நிறுவனத்தினா் வாகனத்தில் கருவடிக்குப்பம் மயானத்துக்கு புதன்கிழமை பிற்பகல் கொண்டு வந்தனா். அங்கு நகராட்சி ஆணையா் மு. கந்தசாமி தலைமையில், வட்டாட்சியா் குமரன், எஸ்பி சுபம்கோஷ் மற்றும் முதியவரின் உறவினா்கள் இருவா் ஆகியோரது முன்னிலையில், பாதுகாப்பான முறையில் உடல் மின் தகனம் செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 13 பேரையும் சோ்த்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 145-ஆக அதிகரித்தது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT