புதுச்சேரி

பெண் உள்பட 2 போ் தற்கொலை

DIN

புதுச்சேரியில் தனித் தனி சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (24).

கடந்த பிப்ரவரி மாதம் நாகலிங்கத்தின் தாய் நாகம்மாள் உடல் நலக்குறைவால் இறந்தாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட நாகலிங்கம் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாா். இதை அவருடைய மனைவி சத்யா கண்டித்தாா். இதனால், விரக்தியடைந்த நாகலிங்கம், கடந்த 5 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மலா்விழி (50). தனியாா் வங்கியில் துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வந்தாா். உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த இவா், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT