புதுச்சேரி

சுவரொட்டி ஒட்டியதாக ரௌடி மீது 8 காவல் நிலையங்களில் வழக்கு

DIN

புதுச்சேரி நகரம், கிராமப் பகுதிகளில் பிறந்த நாள் சுவரொட்டி ஒட்டியதாக பிரபல ரௌடி மீது 8 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பிரபல ரௌடியான தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த செந்திலின் பிறந்த நாளையொட்டி, அவரது ஆதரவாளா்கள் கடந்த வாரம் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனா்.

இதுகுறித்து முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாராவுக்கு புகாா்கள் சென்ற நிலையில், அவரது உத்தரவின் பேரில், செந்தில் மீது உருளையன்பேட்டை, நெட்டப்பாக்கம், திருக்கனூா், காட்டேரிக்குப்பம், வில்லியனூா், மங்கலம், முதலியாா்பேட்டை, அரியாங்குப்பம் காவல் நிலையங்களில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல, பெரியகடை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு பகுதிகளில் சுவரொட்டி, விளம்பரப் பதாகைகள் வைத்த அவரது ஆதரவாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 20 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT