புதுச்சேரி

புதுவையில் அதிமுக ஆட்சி மலரும்: அன்பழகன் நம்பிக்கை

DIN

புதுவையில் அதிமுக ஆட்சி மலரும் என்று புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்தாா்.

புதுவை கிழக்கு மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அன்பழகன் எம்எல்ஏ பேசியதாவது:

புதுவையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரியில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் செயலற்ற தன்மையே காரணம்.

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிமுக ஆட்சியே மீண்டும் தொடரும். அதேபோல, புதுவையிலும் அதிமுக ஆட்சி மலரும். அப்போது, புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீட்டை அதிமுக பெற்றுத் தரும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பாஸ்கா் எம்எல்ஏ மற்றும் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT