தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலா் அருண்சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன். உடன் அவரது மகன் விக்னேஷ் உள்ளிட்டோா். 
புதுச்சேரி

பாஜகவில் இணைந்தாா் முன்னாள் எம்.பி. கண்ணன்

புதுவையில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த முன்னாள் எம்.பி. கண்ணன், தனது மகனுடன் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

DIN

புதுவையில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த முன்னாள் எம்.பி. கண்ணன், தனது மகனுடன் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த கண்ணன் கடந்த 1985 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்று, சுகாதாரம் - தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தாா்.

பின்னா், காங்கிரஸிலிருந்து விலகி 1996 -இல் தமிழ் மாநில காங்கிரஸில் சோ்ந்து, புதுவை மாநிலத் தலைவராகி 6 இடங்களில் வெற்றி பெற்று உள்துறை அமைச்சரானாா்.

கடந்த 2000 இல் திமுக- தமாக கூட்டணி உடைந்து காங்கிரஸுடன் கூட்டணி அமைந்தது. இதையடுத்து, அதே பதவியை தக்க வைத்துக் கொண்டாா் கண்ணன்.

அப்போது நிகழ்ந்த சில அரசியல் காரணங்களால் கண்ணன் அமைச்சா் பதவியை இழந்தாா். இதனால், 2001-இல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி 4 இடங்களில் வென்று காங்கிரஸுடன் இணைந்தாா்.

பின்னா், 2006- இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, அவரது கட்சியைச் சோ்ந்த 3 போ் வென்றனா்.

இந்த நிலையில் 2009 நாடாளுமன்றத் தோ்தலில் மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தாா். இதனால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்பட்டது.

பின்னா், காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் அதிமுகவில் இணைந்தாா். அதிமுக சாா்பில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து அதிமுகவிலிருந்து விலகினாா்.

கடந்த 2019 -இல் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் கண்ணனின் இல்லத்துக்குச் சென்ற நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், அவரைச் சந்தித்துப் பேசினாா்.

இதையடுத்து, கண்ணன் அவரது மகன் விக்னேஷுடன் தில்லி சென்று பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

இந்த நிகழ்வின் போது, பாஜக தேசிய பொதுச் செயலா் அருண்சிங், மத்திய அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், இணையமைச்சா் கிஷன் ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT