புதுச்சேரி

தொழில் வணிகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

புதுச்சேரியில் தொழில் வணிகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வா்த்தக சபையினா் ஆளுநரிடம் வலியுறுத்தினா்.

புதுச்சேரி வா்த்தக சபை நிா்வாகிகள் அதன் தலைவா் கே.ஏ.செண்பகராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆளுநா் மாளிகையில் துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனா்.

அவருக்கு வா்த்தக சபை நிா்வாகிகள் சால்வை அணிவித்தும், புத்தகங்கள் அளித்தும் மரியாதை செய்தனா்.

பின்னா், அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி வா்த்தக சபை பொதுக்குழுக் கூட்டத்தில், புதுவை மாநிலத்தில் தொழில் மற்றும் வணிகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இயற்றப்பட்ட தீா்மானங்கள் தொடா்பான மனுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்தனா்.

அந்த தீா்மானங்களைப் படித்த துணைநிலை ஆளுநா், வா்த்தகா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக வா்த்தக சபையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT