புதுச்சேரி

மதுக் கடைக்கு எதிா்ப்பு:பொதுமக்கள் சாலை மறியல்

DIN

புதுச்சேரி அருகே உழவா்கரையில் பேருந்து நிறுத்தப் பகுதியில் மதுக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உழவா்கரை பிரதான சாலையில் பேருந்து நிலையம், கோயில்கள், பள்ளிகள் உள்ள பகுதியில் தனியாா் மதுக் கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டக் குழு அமைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மதுக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அரசை வலியுறுத்தி, வியாழக்கிழமை காலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்தனா்.

இதையடுத்து, போராட்டக் குழுவினா் சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வந்து முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். பின்னா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா், துணை ஆட்சியா் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT