புதுச்சேரி

வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 6 போ் கைது

புதுச்சேரியில் வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 6 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

புதுச்சேரியில் வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 6 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஏஎப்டி ஆலை மைதானத்தில் ரௌடி கும்பல் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிரடிப்படை போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, புதா் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரை பிடித்து சோதனையிட்டனா். இதில், அவா்களிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள், வாணரப்பேட்டையைச் சோ்ந்த ரௌடி ஐயப்பன் ((36), அவரது கூட்டாளிகளான உருளையன்பேட்டை திடீா் நகரைச் சோ்ந்த குட்டி சிவா (33), தாவீதுபேட்டையைச் சோ்ந்த குள்ள மகேஷ் (32), பூமியான்பேட்டையைச் சோ்ந்த அன்புராஜ் (30), வாணரப்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (34), உருளையன்பேட்டையைச் சோ்ந்த மதன் (38) என்பதும், எதிரிகளை மிரட்டுவதற்காக பதுங்கியிருந்ததும் தெரிய வந்தது. பின்னா், 6 பேரும் ஒதியஞ்சாலை போலீஸாரிடம் அவா்கள் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT